புதன், 9 ஏப்ரல், 2014

இப்போது வாக்காளர்கள் எஸ்எம்எஸ் மூலம் வாக்கு சாவடிகளுக்கு பற்றி தகவல் பெற தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தங்கள் வாக்கு சாவடிகளுக்கு பற்றி வாக்காளர்கள் தகவல்களை வழங்க 14 மாநிலங்களில் ஒரு முயற்சி தொடங்கப்பட்டது. இதன் கீழ், வாக்காளர்கள் தங்கள் பெயர்களை தேட முடியும் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அல்லது தேசிய அளவிலான வாக்காளர் பட்டியலில் வாக்கு சாவடிகள் தொடர்பான இண்டர்நெட் மூலம் தகவல் கிடைத்தது. சேவை தன்னை இலவசமாக போது, பயனர்கள் எஸ்எம்எஸ் கட்டணம் அல்லது இணைய அணுகல் கட்டணம் தாங்க வேண்டும், தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். எஸ்எம்எஸ் மூலம் சேவைகளை அணுக, வாக்காளர்கள் வார்த்தை போன்ற பெயர் அல்லது அவரது விவரங்கள் தொடர்ந்து "ECI" ஒரு முன் வடிவமைக்கப்பட்ட எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும், பிறப்பு மற்றும் பாலினம் தந்தை / கணவர், உள்ளூர், வயது அல்லது தேதி பெயர் பிரிக்கப்பட்ட முகவரிகள். சேவை அருணாச்சல பிரதேசம், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, தில்லி, கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், நாகாலாந்து, பாண்டிச்சேரி, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தேர்தல் தரவு துவங்கப்பட்டு . மீதமுள்ள மாநிலங்களில் சேவை விரைவில் பரவியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சனி, 5 ஏப்ரல், 2014

16 லட்சம் பேர் பயன் அடைவார்கள் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு ரூ.1,000 முதல் ரூ.6 ஆயிரம் வரை கூடுதலாக கிடைக்கும்

அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவை தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அறிவித்தது. அதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து முன்தேதியிட்டு உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அதே அளவில் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த தொகையை 1.1.14 அன்றைய தேதியில் இருந்து கணக்கிட்டு பணமாக கொடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி, முன்தேதியிட்டு கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான அகவிலைப்படியின் பாக்கித்தொகை உடனடியாக பணமாக வழங்கப்படும். அதாவது, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த அகவிலைப்படி உயர்வு உத்தரவு அமலுக்கு வருகிறது. யார்-யாருக்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசுத் துறைகளில் முழு நேர பணியாளர்களாக இருந்து, அகவிலைப்படியை பெற்றுவரும் அனைவருக்குமே இந்த அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவு பொருந்தும். ஆசிரியர்கள் மற்றும் அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுடன், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் அல்லது அகில இந்திய கல்வி குழுமத்தின் நிர்வாகத்துக்குள் வரும் ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்பு டிப்ளமோ கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடல்கல்வி இயக்குனர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும். அங்கன்வாடி ஊழியர்கள் மேலும் வருவாய்த்துறையின் கீழ் வரும் கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வரும் கிராம பஞ்சாயத்து கிளார்க்குகள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பாக்கியை எந்த வித காலதாமதமும் இல்லாமல் அரசுக் கருவூல அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ரூ.6 ஆயிரம் வரை கிடைக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அகவிலைப்படி உயர்வினால் அரசுத் துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை, ஆயிரம் ரூபாய் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை கூடுதலாக பெறுவார்கள் என்று தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது. அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 16 லட்சம் பேர் பயன் அடைவார்கள். தேர்தல் கமிஷன் அனுமதி பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், இதுபோன்ற உத்தரவுகளை எந்த மாநில அரசும் தானாக பிறப்பித்துவிட முடியாது. அதுபற்றி கேட்டபோது, இந்திய தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற்ற பிறகே இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

போக்குவரத்துக்கு உதவும் இரண்டாவது செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் ஏவியது

இந்தியாவின் இரண்டாவது நேவிகேஷனல் (போக்குவரத்து உதவி) செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1 பி வெள்ளிக்கிழமை மாலை இந்திய நேரப்படி 5.14 மணிக்கு பி.எஸ்.எல்.வி. - சி 24 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 58.5 மணி நேர கவுன்ட் டவுன் கடந்த 2ஆம் தேதி காலை 6.44 மணிக்குத் துவங்கியிருந்தது. பல்வேறு விதமான போக்குவரத்துகளைக் கண்காணிப்பதற்காக இந்தியா ஏவுவதற்குத் திட்டமிட்டிருக்கும் ஏழு நேவிகேஷனல் செயற்கைக்கோள் வரிசையில் இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1 பி இரண்டாவதாகும். இந்த செயற்கைக் கோள் 1432 கிலோ கிராம் எடையை உடையது. வெள்ளி மாலை சரியாக ஐந்தே கால் மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து முதலாவது ஏவு தளத்திலிருந்து ஏவப்பட்டது. இதற்கு முந்தைய நேவிகேஷனல் செயற்கைக் கோளான ஐஆர்என்எஸ்எஸ் - 1 ஏ 2013ஆம் ஆண்டு ஜூலையில் ஏவப்பட்டது. முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்டு ஏழு மாதங்களுக்குள்ளாகவே இந்த இரண்டாவது செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஏவப்பட்டிருக்கும் செயற்கைக்கோளின் வாழ்நாள் பத்து ஆண்டுகளாகும். நிலை நிறுத்தப்படும் புள்ளியிலிருந்து ஆயிரத்து ஐநூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல்வழி, வான் வழி, தரைப் போக்குவரத்து ஆகியவற்றைக் கண்காணிக்கவும் பேரிடர் கால உதவிக்காகவும் இந்தியா உருவாக்க முயற்சிக்கும் இந்தியன் ரீஜினல் நேவிகேஷனல் சாட்டிலைட் சிஸ்டம் செயல்பட வேண்டுமென்றால், நான்கு செயற்கைக்கோள்களாவது ஏவப்பட்டிருக்க வேண்டும். தற்போது இந்த செயற்கைக்கோளை ஏவப் பயன்படுத்தியிருக்கும் பி.எஸ்.எல்.வி. - சி 24 ராக்கெட் எக்ஸெல் வகையைச் சேர்ந்ததாகும். அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவப் பயன்படுத்தப்படும் இந்த ராக்கெட்டை இஸ்ரோ ஐந்தாவது முறையாகப் பயன்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இம்மாதிரி கண்காணிப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றன.

புதன், 2 ஏப்ரல், 2014

இந்தியாவின் உணவு பாதுகாப்புக்கு ஆபத்து: சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரிக்கை

: 'புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பாதிப்பால், இந்தியாவின் உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு ஆபத்து ஏற்படும்' என, சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஐ.பி.சி.சி., எனப்படும், நாடுகளுக்கு இடையோன சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழு, ஜப்பானில் வெளியிட்டுள்ள அறிக்கை:காடுகள் அழிக்கப்படுவது, தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு போன்ற பல காரணங்களால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. புவி வெப்பமயமாகி, பல பாதிப்புகள் ஏற்படத் துவங்கியுள்ளன, கரியமில வாயு அதிக அளவில் வெளியேறுவதால், ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, சர்வதேச நாடுகளில், பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, இந்தியா, சீனா போன்ற நாடுகளில், உணவுப் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில், காற்றின், வெப்பத்தின் தன்மை அதிகரித்துள்ளது. பருவ மழை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி புயல்கள் தாக்குகின்றன. கங்கை நதியிலும், நீரோட்டம் குறைவால், அங்கு அதிகமாக கிடைக்கும் மீன் வளம் குறையும். விளைச்சல் குறையும் இதுபோன்ற பிரச்னைகளால், விவசாயத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதால், உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். அதிகமாக பயன்படுத்தப்படும், கோதுமை, அரிசி ஆகியவற்றின் விளைச்சல் குறையும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 'இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க, போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசை வற்புறுத்திஉள்ளனர்.உலக நாடுகளில் நிலவும் பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு போன்ற அறிவியல் பூர்வமான தகவல்களை தெரிவிக்கும் இந்த அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படுகிறது; இது, 1988ல் ஏற்படுத்தப்பட்டது.இதன் தலைவராக, இந்தியரான, ராஜேந்திரா கே பச்சோரி உள்ளார்.

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

சுற்றுச்சூழல் மூடநம்பிக்கைகள்: நதி நீர் வீணாகக் கடலில் கலக்கிறதா?

‘வீணாகக் கடலில் கலக்கும் நதி நீரைத் தமிழகத்துக்குக் கொடுத்தால் என்ன?' என்பது போன்ற குரலை நாம் அடிக்கடி கேட்கலாம். தமிழகத்துடன் நதிநீர்ப் பங்கீடு செய்துகொள்ளப்படுவது சரிதான். ஆனால், நதிநீர் கடலில் வீணாகக் கலக்கிறது என்ற வாதம்தான் தவறு. கடல்களின் முக்கிய நீர் ஆதாரங்களில் நதிகளும் அடக்கம். திடீரென்று, உலகில் உள்ள எல்லா நதிகளையும் கடலில் கலக்கவிடாமல் தடுத்துவிடுகிறோம் என்று கற்பனையாக வைத்துக்கொள்வோம். அப்போது என்ன ஆகும்? கடல் மட்டம் குறிப்பிட்ட அளவு குறைந்துவிடும். உலகின் தட்பவெப்பத்தை நிர்ணயிப்பதில் கடல்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே, கடல் மட்டம் அளவுக்கு அதிகமாக உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் உலகம் பேரழிவைச் சந்திக்கும். மேலும், கடல் நீரின் உப்புத் தன்மையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில், கடலில் கலக்கும் ஆற்று நீரும் ஒரு முக்கியக் காரணம். அதிக அளவில் ஆறுகள் கலக்கும்போது, அந்தக் கடலின் உப்புத்தன்மை குறிப்பிடத்தகுந்த அளவு குறைவாக இருக்கும். மிகக் குறைவான ஆறுகள் கலக்கும் கடலில், உப்புத்தன்மை அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, பால்ட்டிக் கடலில் ஏராளமான ஆறுகள் கலப்பதால் அதன் உப்புத்தன்மை மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால், ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையேயுள்ள செங்கடல் பகுதியில் மிகக் குறைந்த அளவே நதிகள் கலப்பதால் அந்தப் பகுதியில் உப்புத்தன்மை உலகிலேயே மிகவும் அதிக அளவாக 40% காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஒரு நதி உருவான இடத்திலிருந்து கடலில் கலப்பது வரை, அந்த நதியின் நீரை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு இயற்கைச் சூழல்தொகுதிகள் (Eco system) உருவாகியிருக்கும். பாதியிலேயே நதியைத் தடுத்துவிட்டால் அந்தச் சூழல்தொகுதிகள் அழிவுக்கு உள்ளாகி, இயற்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். இயற்கையின் அம்சங்களில், செயல்பாடுகளில் ஏதுவுமே வீண் இல்லை. எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை. எனவே, இயற்கையின் போக்கை இயற்கையிடமே விட்டுவிடுவதுதான் நம் அனைவருக்கும் நல்லது.

திங்கள், 31 மார்ச், 2014

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய அத்தாட்சி சீட்டு வழங்கும் முறை அறிமுகம்

சென்னை: யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய அத்தாட்சி சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சோதனை முறையில் மத்திய சென்னையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் 1,153 வாக்கு சாவடிகளிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. வாக்களித்த உடன் இயந்திரத்தில் இருந்து ஒப்புகைச் சீட்டு ஒன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தாட்சி சீட்டில் ரகசிய முறையில் வாக்களித்த சின்னம் அச்சிடப்பட்டிருக்கும். கண்ணாடி ஜன்னலுக்கு நேராக அத்தாட்சி சீட்டை உயர்த்தி பார்த்தால் சின்னம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முறை குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தகவல் அளித்துள்ளார்.

ஞாயிறு, 30 மார்ச், 2014

ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்.

வெள்ளி, 28 மார்ச், 2014

மார்ச் 28

தீரர் சத்யமூர்த்தி நினைவு தினம் இன்று.உலக புகழ்பெற்ற 'தாய்' நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கி பிறந்த தினம்.

ஞாயிறு, 16 மார்ச், 2014

நாளை (பங்குனி 3/17.3.14) தமிழ்நாடு முழுவதும் "வைட்டமின் ஏ சொட்டு மருந்து முகாம்"நடைபெறும். போலியோ சொட்டு மருந்து போன்று வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்குவதும் மிக மிக முக்கியமானது.மாலைக் கண் நோய்,கண்களில் புள்ளி விழுதல் போன்ற குறைபாடுகள் வராமல் தடுக்க 6 மாதம் ஒருமுறை கொடுக்கப்படுகிறது.பிறந்த 6 மாதம் வரையுள்ள குழந்தைகளாயிருப்பின் அதன் தாய்மார்களுக்கும்,6 மாதத்திற்கு மேல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் தவறாமல் கொடுக்க வேண்டும்.இம் மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள்,பால்வாடி மையங்களிலும் வழங்கப்படும்.நாளை முதல் 4 நாட்களுக்கு வழங்கப்படுமாயினும் நாளையே வழங்குதல் சிறப்பு.நேரம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை.பகிர்வோம்.நோயற்ற வலிமையான பாரதம் உருவாக துணை நிற்போம்.

வெள்ளி, 14 மார்ச், 2014

போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதையடுத்து இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
இதையடுத்து தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமை நிலைய செயலாளர் திரு. சாந்தகுமார் தெரிவித்தார். மேலும் இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
 
இனிய PI நாள்!
பை நாள் உலகம் முழுவதும் (3/14) மார்ச் 14 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன் விட்டம் ஒரு வட்டத்தின் சுற்றளவு விகிதம் - - சுமார் 3,14159 இது பை (கிரேக்கம் கடிதம் "π") ஒரு நிலையான பிரதிநிதித்துவம் கணிதம் பயன்படுத்தப்படும் சின்னமாக இருக்கிறது
Ahmed Zainy இன் படங்கள்
ஒரு வாழ்க்கை ஒரு வெற்றி என்றால், ஒரு எக்ஸ் பிளஸ் Y மற்றும் z சமம். வேலை x ஆகிறது; Y நாடகம் ஆகும்; மற்றும் z உன் வாயை மூடி வைத்து.
135 ஆண்டுகளுக்கு முன்பு இன்று, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், உலகின் மிக செல்வாக்கு மிக்க இயற்பியல் ஒன்று பிறந்தார். 
 · 

புதன், 12 மார்ச், 2014

AIRF urges for 25% allowance hike as DA crosses 100%

All India Railwaymen’s Federation 4, State Entry Road, New Delhi-110055No.AIRF/13 Dated: March 10, 2014 The Secretary(E), Railway Board, New Delhi Sub: Enhancement in the rates of various allowances by 25% consequent upon Dearness Allowance crossing 100% Ref.: Railway Board’s letter No.F(E)I/2011/AL-28/18 dated 13.06.2011(RBE No.87) and E(P&A) I-2011/SP-1/Misc.1 dated 13.06.2011(RBE No.88/2011) The VI CPC in their report had recommended that certain allowances, viz. Children Education Allowance, National Holiday Allowance, Daily Allowance, Washing Allowance, Breakdown Allowance, Special Compensatory Allowance, Cycle Maintenance Allowance, Fixed Conveyance Allowance, Road Mileage Allowance, Special Allowance to various categories of staff etc., should be increased by 25% whenever Dearness Allowance crosses 50%, and this recommendation was duly accepted by the Government of India. Based on the above recommendation of the VI CPC, these allowances have since been enhanced by 25% w.e.f. 01.01.2011, i.e. from the date, Dearness Allowance having been crossed 50%. Now, Dearness Allowance has crossed 100% w.e.f. 01.01.2014, there is, therefore, gross justification that the above allowances be further enhanced by additional 25%, as Dearness Allowance has again crossed the value of 50% after enhancement of these allowances w.e.f.01.01.2011.The Board are, therefore, requested to issue necessary instruction to this effect an early date Yours faithfully, sd/- (Shiva Gopal Mishra) General Secretary.

சனி, 8 மார்ச், 2014

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் : பிரவீன் குமார்

தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் குமார், தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் முறையாக பின்பற்ற வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மகளிர் தின சிறப்பு : அவ்வையார் சிலைக்கு மலர் தூவி மரியாதை

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழ் மூதாட்டி அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் முனைவர் மூ. ராசாராம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் பணியை தவிர்த்தால் நடவடிக்கை : தேர்தல் ஆணையம் உத்தரவு

 
              தமிழகத்தில், தேர்தல் பணியை தவிர்க்கும் பொருட்டு, மருத்துவ விடுப்பில் செல்லும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே கட்டமாக ஏப்., 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம், அறிவித்தது.
 
              அன்றைய தினம் முதலே, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. இதற்கிடையே, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, ஊழியர்கள், தேர்தல் பணியை தவிர்க்கும் பொருட்டு, மருத்துவ விடுப்பில் செல்ல முயல்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

                       தேர்தல் ஆணைய உத்தரவில், 'தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மருத்துவ விடுப்பில் செல்ல முயன்றால், அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைத்து, ஒரு வார காலத்திற்குள் அறிக்கை பெறப்படும். சம்பந்தப்பட்ட ஊழியர், தேர்தல் பணியில் ஈடுபட உடல் தகுதியானவர் என, அறிக்கையில், தெரியவந்தால், அவர் மீது, அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் { முகநூல் ) தெரிந்ததும் தெரியாததும் ஒரு பார்வை....

 
           இப்போது நாம் நம் முகம் அறியா நண்பர்களுடன் உரையாடிக் கொண்டும் செய்திகளை பகிர்ந்து கொண்டும் இருக்கும் Facebook எனப்படும் முகநூலைப் பற்றி தெரிந்து கொள்வோமா...?
        உங்களுடைய பொன்னான நேரத்தை சிறிது நேரம் செலவழியுங்கள் நண்பர்களே 
          அண்மையில், பிப்ரவரி 4ல், சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது அனைவரும் அறிந்த விஷயம் . 
           ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. 
பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் காண்போம்.
1. ஓர் எளிய தொடக்கம்: 
2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், பேஸ்புக் தளத்திற்கான விதை ஊன்றப்பட்டது. 
பின்னாளில், உலகின் அனைத்து மூலைகளிலும், ஆலவிருட்சமாக வளர்ந்து, டிஜிட்டல் உலகில் முதல் இடத்தில் இயங்கும் இந்த நிறுவனம், அப்போது ஒரு சிறிய விடுதியின் ஒதுக்குப் புறமான அறையில் தொடங்கப்பட்டது. 
பத்தாண்டுகளுக்கு முன்பு அதனை "Thefacebook” என இதனைத் தொடங்கிய மார்க் ஸக்கர் பெர்க் பெயரிட்டார். 
2003 ஆம் ஆண்டு அக்டோபரில், ஸக்கர்பெர்க் மற்றும் அவரது வகுப்புத் தோழர்களான ஆண்ட்ரூ மெக்கலம், கிறிஸ் ஹ்யூஸ் மற்றும் டஸ்டின் மொஸ்கோ விட்ஸ் ஆகியோர் Facemash.com என்னும் இணைய தளம் ஒன்றை உருவாக்கி, அதனை யாவரும் அணுகி, இரண்டு மாணவர்களின் படத்தில் எது சிறந்தது என்று ஒப்பிடும் வசதியைத் தந்தனர். 
இதனை விளம்பரப்படுத்தி பிரபலமாக்குவதற்காக, அப்போது ஹார்வேர்ட் பல்கலைக் கழகம் மாணவர்களுக்கென நடத்தி வந்த இணைய தளங்களை ஸக்கர் பெர்க் முடக்கினார் என்று ஒரு செய்தி அப்போது வெளியானது. 
தொடக்கத்தில் Facemash என அழைக்கப்பட்ட பேஸ்புக் தளத்தினை, ஹார்வேர்ட் பல்கலை நிர்வாகம் மூடியது. 
காப்புரிமை, பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம் ஆகியவற்றில் அந்த தளம் தலையிடுவதாக, பல்கலைக் கழக அதிகாரிகள் ஸக்கர்பெர்க் மீது நடவடிக்கை எடுத்தனர். 
இதன் பின்னரே, ஸக்கர்பெர்க் "thefacebook.” என்னும் புதிய தளத்தினை அமைத்தார். 
2. பிறந்தது பேஸ்புக்: 
2004 பிப்ரவரி 4 ஆம் நாள், ஸக்கர்பெர்க் thefacebook.com என்னும் தன் தளத்தினை இயக்கத் தொடங்கினார். 
தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில், 1,500 பயனாளர்கள் இதில் இணைந்தனர். 
ஹார்வேர்ட் பல்கலையில் பட்ட வகுப்பு மாணவர்களில் பாதிப்பேர் இதில் இணைந்தனர். 
பின்னர், இந்த தளத் தினை மற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப் பட்டனர்.
3. படங்களின் பதிவுகள் தொடங்கின: 
தொடக்கத்தில் பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்கள் அனுமதிக்கப்படவில்லை. 
அக்டோபர் 2005ல், ஒவ்வொரு பயனாளரும் எவ்வளவு போட்டோக்கள் மற்றும் படங்களை அப்லோட் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்று அனுமதி தரப்பட்டது. 
இன்று பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்களே முக்கிய அம்சங்களாக உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 
2013 செப்டம்பரில், இத்தளத்தில் பதியப்பட்ட படங்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் கோடியைத் தாண்டி யதாக அறிவிக்கப்பட்டது. 
நாள் தோறும் 35 கோடி படங்கள் அப்லோட் செய்யப்படுகின்றன.
4. அனைவருக்கும் அனுமதி: 
கல்லூரிகள், பள்ளிகள் என்ற எல்லை வரையறையைத் தாண்டி, பேஸ்புக் இணைய தளத்தில் பல பிரிவினரும் இணைய, இந்த தளம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. 
2006, செப்டம்பர் 26ல், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இணைந்து பதிந்து கொள்ளலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டது. 
இதனால், 2006 ஆண்டு இறுதியில், பயனாளர் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது. 
அதற்கு முந்தைய ஆண்டில், இது 55 லட்சமாக மட்டுமே இருந்தது.
5. என் குறிக்கோள் பணம் அல்ல: 
2006 செப்டம்பரில், யாஹூ நிறுவனம் நூறு கோடி டாலர் கொடுத்து, பேஸ்புக் இணைய தளத்தினை வாங்க முன்வந்தது. 
பேஸ்புக் இணைய தள நிறுவனத்தில் முதன் முதலில் முதலீடு செய்த பீட்டர் என்பவர், இதனை ஏற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினார். 
ஆனால், இதற்கென கூட்டப்பட்ட கூட்டத்தில், 22 வயது இளைஞரான ஸக்கர்பெர்க், "இந்த கூட்டம் 10 நிமிடத்தில் முடியப்போகிறது. 
நாங்கள் எங்கள் இணையதளத்தை விற்கப் போவதில்லை” என அறிவித்தார். 
ஏனென்றால், பணம் சம்பாதிப்பதை தன் இலக்காக என்றைக்குமே ஸக்கர்பெர்க் கொண்டதில்லை. 
"இந்தப் பணத்தை வைத்து நான் என்ன செய்திட முடியும்? வேண்டுமானால், இன்னொரு சமூக தளத்தைத் தொடங்கலாம். அதற்கு இதனையே வளப்படுத்துவேன்” என்றார்.
6. செய்தித் தொகுப்பு: 
பேஸ்புக் இணையதளத்தின் முதல் 30 மாதங்கள், பயனாளர்களின் தகவல் பக்கங்களைப் பதிந்து இயக்குவதிலேயே இருந்தன. 
செப்டம்பர் 2006ல், முதல் முதலாக, பேஸ்புக் தளத்தில் செய்திகள் தரப்பட்டன. 
உங்கள் சமூக வளைவில் என்ன நடக்கின்றன என்று தகவல்களைத் தருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. 
இதனால், தொடர்ந்து ஒரு நிகழ்வு சார்ந்து கிடைக்கும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 
இதனுடன் பேஸ்புக் MiniFeed என்ற வசதியையும் கொடுத்தது. இதில் பயனாளர் ஒருவரின் சமூக செயல்பாடுகள் தொகுக்கப்பட்டன.
7.புரோகிராமர்களுக்கு அனுமதி: 
2007 ஆம் ஆண்டு மே 24 அன்று, பேஸ்புக் தன்னுடைய Facebook Platform என்னும் மேடையை மக்களுக்கு வழங்கியது. 
இது, பேஸ்புக் தளத்தில் இயங்கக் கூடிய புரோகிராம் களை மற்றவர்கள் தயாரித்து வழங்குவதற்கான மேடையாக அமைந்தது. 
தேர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களுக்கு உதவி புரிய Facebook Markup Language என்னும் வசதியையும் இதனோடு அளித்தது. 
பல முக்கிய அப்ளி கேஷன்கள் பேஸ்புக் தள செயல்பாட்டில் இணைந்தன.
8. லாபம் ஈட்டியது: 
நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் கழித்து, பேஸ்புக் நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்குவதாக அறிவிக்கப்பட்டது. 
2009ல், இந்நிறுவனம் பெற்ற வருமானம் 77.7 கோடி டாலர். இது 2008ல் பெற்றதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. (சென்ற வாரம், பேஸ்புக் தன் நான்காவது காலாண்டில் மட்டும் 206 கோடி டாலர் விற்பனை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 63% கூடுதலாகும்.)
9. பங்கு வெளியீடு: 
2012 ஆம் ஆண்டு மே மாதம், தன் பொதுப் பங்கு வெளியீட்டினை பேஸ்புக் மேற்கொண்டது. 
இதன் மூலம் 1,600 கோடி டாலர் திரட்டியது. அமெரிக்க சரித்திரத்தில், இது மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக அமைந்தது.
10. நூறு கோடி பேர்: 
சென்ற 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் 4ல், பேஸ்புக் இணையதளத்தில் ஒரு மாதத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, நூறு கோடி யைத் தாண்டியதாக, ஸக்கர்பெர்க் அறிவித்தார். 
ஏறத்தாழ, இந்தப் புவியில் வாழும் ஏழு பேரில் ஒருவர், பேஸ்புக் பயனாளராக உள்ளனர். 
நூறு கோடிப் பேரை, ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வைத்து, நட்பு ரீதியாக இணைப்பது என்பது மிகப் பெரிய பணி என அடக்கத்துடன் ஸக்கர்பெர்க் கூறினார். 
என் வாழ்வில் இதுதான் நான் அதிகம் பெருமைப்படும் விஷயம் என்றும் அறிவித்தார்.

திங்கள், 3 மார்ச், 2014

தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, அரசின் ஆணை பெற்றவுடன் நடத்த தயார் - தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி இன்று SSTA சங்கத்தை சேர்ந்த மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வி இயக்குனரை சந்தித்து 2013-14ஆம் கல்வியாண்டுகான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தமாறு வலியுறுத்தப்பட்டது. அப்பொழுது தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் கலந்தாய்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன எனவும், அரசின் அனுமதிகாக காத்திருப்பதாகவும், அனுமதி வந்த உடன் ஒரே நாளில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என்று உறுதியளித்தார். இதுகுறித்து அரசு உடனடியாக உரிய ஆணை பிறப்பிக்க வலியுறுத்தி நாளை சங்க மாநில பொறுப்பாளர்கள், உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக சங்க மாநில பொறுப்பாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். மேலும் அதற்குள் தேர்தல் அறிவிப்பு வராமல் இருப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.
முதுகலை ஆசிரியர் நியமன இறுதி பட்டியல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு இன்று காலை சுமார் 10.30 மணியளவில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு வாரியத்தின் முன் குவிந்தனர். அப்பொழுது முதுகலை ஆசிரியர் நியமனம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் திரு.ஆறுமுகம் அவர்கள் கூறும் போது சென்ற வெள்ளிக்கிழமையே பட்டியல் தயாராகிவிட்டது எனவும் ஆனால் COMMUNAL ROASTERல் சில தவறுகள் இருப்பதால் அவற்றை சரிசெய்து புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பிரச்சினையின் போது பத்திரிக்கையாளர்கள் குவிந்ததால் அவர்களை டி.ஆர்.பி.,க்குள்அழைத்து சுமார் அரை மணி அவர்களிடம் பேசினர்.
TET தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம் இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற 2வேன்கள் நிறைய போலீஸ் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். அதேபோல் ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தவர்களை முதலில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது டி.ஆர்.பி., சார்பில் அரசாணை இரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது