ஞாயிறு, 16 மார்ச், 2014

நாளை (பங்குனி 3/17.3.14) தமிழ்நாடு முழுவதும் "வைட்டமின் ஏ சொட்டு மருந்து முகாம்"நடைபெறும். போலியோ சொட்டு மருந்து போன்று வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்குவதும் மிக மிக முக்கியமானது.மாலைக் கண் நோய்,கண்களில் புள்ளி விழுதல் போன்ற குறைபாடுகள் வராமல் தடுக்க 6 மாதம் ஒருமுறை கொடுக்கப்படுகிறது.பிறந்த 6 மாதம் வரையுள்ள குழந்தைகளாயிருப்பின் அதன் தாய்மார்களுக்கும்,6 மாதத்திற்கு மேல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் தவறாமல் கொடுக்க வேண்டும்.இம் மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள்,பால்வாடி மையங்களிலும் வழங்கப்படும்.நாளை முதல் 4 நாட்களுக்கு வழங்கப்படுமாயினும் நாளையே வழங்குதல் சிறப்பு.நேரம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை.பகிர்வோம்.நோயற்ற வலிமையான பாரதம் உருவாக துணை நிற்போம்.