வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கு இன்று 42-வது பிறந்த நாள்: தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம்


இந்தியா 68-வது சுதந்திர நாளை கொண்டாடும் இந்த நேரத்தில், சுதந்திரத்துக்கான அடையாளங்கள் நாடெங்கும் எவ்வாறெல்லாம் பரவிக்கிடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த பின்கோடு எண் முறை, மொழி வேறுபாடு இன்றி தொலைதொடர்பை செழுமைப்படுத்தி வருகிறது. 1972 ஆகஸ்ட் 15-ம் தேதி இந்திய தபால்துறை அஞ்சல் குறிப்பீட்டு எண்ணை (பின்கோடு எண்) அறிமுகம் செய்தது. ஒரு கடிதம், நாட்டின் எந்த மூலையாக இருந்தாலும் சரியாக அதில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு எளிதில் கொண்டுசேர்க்கும் வகையில் இந்த அஞ்சல் குறியீட்டு எண் நடைமுறைக்கு வந்தது. 68-வது சுதந்திர தினத்தன்று, தனது 42-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது இந்த பின்கோடு எண்.

இதுகுறித்து கோவையில் உள்ள தேசிய விருது பெற்ற முன்னாள் அஞ்சலக அதிகாரி நா.ஹரிஹரன் கூறியதாவது: ‘‘பின்கோடு எண் குறிப்பிடப்பட்ட கடிதம், அந்த எண்ணின் அடிப்படையில் அதற்கான தபால்நிலைய வட்டாரத்தை எளிதில் சென்றடையும் வகையில் நாட்டை 8 பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு ஆரம்ப எண்கள் கொடுத்து, அனைத்து தபால் பட்டுவாடா அலுவலகங்களுக்கும் வரிசைப்படி எண்கள் ஒதுக்கப்பட்டன.

முதல் எண் தபால்நிலையம்

6 இலக்கங்கள் கொண்ட பின்கோடு எண்களில், முதல் எண்கள் மாநில வாரியாகவும், 2 மற்றும் 3-வது எண்கள் அஞ்சல் பிரிப்பகத்தின் துணை மண்டலங்கள், மாவட்டங்கள் அடிப்படையிலும் அமைகின்றன. இறுதி 3 எண்கள் தபால் பட்டுவாடா நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டன.

பின்கோடு வரிசையில் இந்தியாவில் உள்ள முதலாவது எண் கொண்ட தபால்நிலையம் புதுடெல்லி தபால்நிலையம். இதன் எண் 110001. பின்கோடு எண், தபால் சேவைக்கு மட்டுமில்லாமல் பல வகைகளில் பயன்படுத்தப்படுவதால் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது’’ என்றார்.

இந்தியாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் உள்ளன. மாநில எல்லை, மதம், மொழி அனைத்தையும் கடந்து, முகவரி எந்த மொழியில் இருந்தாலும், புரிந்தாலும் புரியாவிட்டாலும் பின்கோடு எண்கள் அதனை சரியாகக் கொண்டு சேர்க்கும். எனவே இது இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஓர் அடையாளமாகவே இன்றைக்கும் திகழ்ந்து வருகிறது.அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கு இன்று 42-வது பிறந்த நாள்: தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம் ——by @UC Browser

அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கு இன்று 42-வது பிறந்த நாள்: தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம் ——by @UC Browser


உலகை அச்சுறுத்தி வரும் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் மனித உடலின் எதிர்ப்புச் சக்தியை எப்படிச் செயலிழக்கச் செய்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் அதன் செயல்பாடுகளைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று இந்த ஆய்வுக்குழுவினர் தீவிரமாக நம்புகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை பதட்டத்திற்கு உள்ளாக்கிய இந்த எபோலா, முதன்முதலாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த அமரசிங்கே மற்றும் பலர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

எபோலா புரோட்டீன் விபி24 என்ற ஒன்று செல்லின் எதிர்ப்புச் சக்தியை கடுமையாக பாதிப்படையச் செய்கிறது.

“எபோலா வைரஸ் முக்கிய எதிர்ப்புச் சக்தி திரவமான இண்டெர்ஃபெரான் என்பதை கடுமையாகச் செயலிழக்கச் செய்கிறது என்பது நீண்ட காலத்திற்கு முன்னரே தெரிந்த விஷயம், இப்போது எபோலா எப்படி இந்தக் காரியத்தைச் செய்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த கொடிய நோய்க்கு புதிய சிகிச்சை முறைகளை வளர்த்தெடுக்க அனுகூலமான நிலை தோன்றியுள்ளது” என்று டாக்டர் அமரசிங்கே தெரிவித்துள்ளார்.

இண்டெர்ஃபெரான் என்ற அந்த திரவத்தின் எபோலா வைரஸ் எதிர்ப்புச் செய்தி அல்லது சமிக்ஞையான ஸ்டாட் 1 என்பதை எபோலா வைரஸ் தொற்று தொந்தரவு செய்கிறது. அதாவது செல் மையத்திற்கு அந்தச் சமிக்ஞை சென்றடைந்தால்தான் உடலின் இயல்பான எதிர்ப்புச் சக்தி எபோலாவை எதிர்த்துப் போராடும். ஆனால் அந்த சமிக்ஞையை எபோலா திறமையாகத் தடுத்து விடுகிறது.

சாதாரணமாக இண்டெர்ஃபெரான் என்பது ஸ்டாட் 1 என்ற அந்தச் செய்தியை செல் மையத்திற்கு அனுப்பிவிடும். அங்கு அது மரபணுக்களையும் நூற்றுக் கணக்கான எதிர்-வைரஸ் புரதங்களையும் செயல்பட முடுக்கி விடுகிறது.

ஆனால் விபி24 என்ற என்ற புரோட்டீன் ஸ்டாட் 1-உடன் சேரும்போது அது செல்மையத்திற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படுகிறது. இதனால் உடலின் இயல்பான வைரஸ் எதிர்ப்புச் சக்திகள் எபோலாவினால் செயலிழந்து விடுகிறது.

எபோலா விபி24 எவ்வாறு இந்த இடையூறைச் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட்டால் எபோலாவை வீழ்த்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!!

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code
இல் புதிய Window மூலம் Open ஆகும்.
அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.
அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும்.
இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code
அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது

சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம?
புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை
paste பண்ணவும்
இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]
இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்.................