திங்கள், 31 மார்ச், 2014

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய அத்தாட்சி சீட்டு வழங்கும் முறை அறிமுகம்

சென்னை: யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய அத்தாட்சி சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சோதனை முறையில் மத்திய சென்னையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் 1,153 வாக்கு சாவடிகளிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. வாக்களித்த உடன் இயந்திரத்தில் இருந்து ஒப்புகைச் சீட்டு ஒன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தாட்சி சீட்டில் ரகசிய முறையில் வாக்களித்த சின்னம் அச்சிடப்பட்டிருக்கும். கண்ணாடி ஜன்னலுக்கு நேராக அத்தாட்சி சீட்டை உயர்த்தி பார்த்தால் சின்னம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முறை குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தகவல் அளித்துள்ளார்.