ஞாயிறு, 2 மார்ச், 2014

தேர்வு புகார்களை பெற "கன்ட்ரோல் - ரூம்' அமைப்பு

              பொது தேர்வு தொடர்பான குறைகள், புகார்களை பெறுவதற்கு வசதியாக, 12 மணி நேரம் செயல்படும் வகையில், "கன்ட்ரோல் - ரூம்' அமைக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு, நாளை, 3ல் துவங்கி, 25 வரையிலும், பத்தாம் வகுப்பு தேர்வு, 26ல் துவங்கி, ஏப்ரல், 9 வரையிலும் நடக்கிறது. 
 
               தேர்வு தொடர்பான தகவல்கள்,புகார்கள், குறைகள் உள்ளிட்ட பிரச்னைகளை, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு, அதிகாரிகள், உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில், "கன்ட்ரோல் - ரூம்' அமைக்கப்பட்டு உள்ளது. காலை, 8:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, ஒரு, குழுவினரும், 2:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, இன்னொரு குழுவினரும், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவர். 044-2827 8284, 044-2827 8286, 044-2827 2088 ஆகிய தொலைபேசி எண்களில், கல்வித்துறை அதிகாரிகள், தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: